சிக்கிம் அமைச்சர் அருண் குமார் ராஜிநாமா

சிக்கிம் மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அருண் குமார் உப்ரிதி இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். 
சிக்கிம் அமைச்சர் அருண் குமார் ராஜிநாமா

சிக்கிம் மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அருண் குமார் உப்ரிதி இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

மேலும் அவர் தனது ராஜிநாமா கடிதத்தை முதல்வர் பிரேம் சிங் தமாங்கை நேரில் சந்தித்து வழங்கினார். அருண் குமார் உப்ரிதி, கிழக்கு மாவட்டத்தில் உள்ள அரிதாங் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வானவர். 

சிக்கிமில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடந்த 16ஆம் தேதி அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் எல்பி தாஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

விரைவில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் தாஸும் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே சிக்கிமில் புதிய பேரவைத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com