பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மணிப்பூர் முதல்வர் என்.பீரேன் சிங்கை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து, காலை விருந்தில் பங்கேற்றார்.
முதல்வரின் இல்லத்திற்குச் செல்லும் வழியில் பாதுகாப்பு அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் இந்திய ராணுவத் தலைவர் மானோஜ் பாண்டே, மாநில அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள், அக்கட்சியின் மாநிலத் தலைவர் சாரதா தேவி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து மணிப்பூர் முதல்வர் வெளியிட்டு டிவிட்டர் பதிவில்,
மாண்புமிகு பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத்சிங் ஜி இன்று எனது இல்லத்தில் இருப்பதும், மாநிலத்தின் பல்வேறு முக்கிய விஷயங்களில் அவருடைய வழிகாட்டுதலைப் பெறுவதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ., சி.ஓ.ஏ.எஸ் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் ராஜ்நாத்சிங் ஜிக்கு எனது இல்லத்தில் காலை உணவு விருந்தளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது தொடர்ச்சியான ஆதரவிற்கு மிகவும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
வடகிழக்கு மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக ராஜ்நாத் சிங் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.