சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்: 16 பேர் கைது

கார்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்: 16 பேர் கைது

கார்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கர்நாடகத்தின் சிவமோகா மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டதற்கு, மாநில முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

இதையடுத்து, குடகு பகுதியில் சித்தராமையாவின் கார் மீது முட்டைகள் வீசப்பட்டது. மேலும், தொலைபேசி மூலம் அவருக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். 

கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக குடகில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஷால் நகரில் 9 பேர் மற்றும் மடிகேரியில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவார்கள் என்று குடகு கண்காணிப்பாளர் ஐயப்பா தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com