உத்தரப் பிரதேசத்தின் தில்லி-யமுனோத்ரி நெடுஞ்சாலையில் லாரி-வேன் மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
ஞாயிறன்று இரவு மிர்சாபூர் கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தபோது தில்லி-யமுனோத்ரி நெடுஞ்சாலையில் லாரி வேனுடன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தனர்.
நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மேலும் இருவர் திங்கள்கிழமை காலை மருத்துவமனையில் இறந்தனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் சூரஜ் ராய் தெரிவித்தார்.
இந்த விபத்தில் வேன் முற்றிலும் சேதமடைந்தது.
இறந்தவர்கள் ஆதில் (25), அவரது கர்ப்பிணி மனைவி அஸ்மா (24), மஷ்கூர் (26), அவரது மனைவி ருக்சார் (27), ரிஹானா (38), சுல்தானா (35) என அடையாளம் காணப்பட்டனர்.
லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.