இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதி ரஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளான்.
கைதான ஐஎஸ் பயங்கரவாதிக்கு துருக்கி நாட்டில் பயிற்சி தரப்பட்டதாகவும் துருக்கி இஸ்தான்புல் சென்ற பயங்கரவாதி ஐஎஸ் இயக்கத்தில் இணைந்ததாகவும் ரஷிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கைதான ஐஎஸ் பயங்கரவாதி மத்திய ஆசிய நாடு ஒன்றை சேர்ந்தவன் என்றும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் ரஷிய உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மும்பை போக்குவரத்துக் காவல் பிரிவின் உதவி மையத்தின் கட்டுப்பாட்டு அறை வோா்லியில் உள்ளது. அங்குள்ள கைப்பேசியின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் ஒரு தகவல் வந்தது. அதில், ‘மும்பையில் 6 போ் கொண்ட குழுவை வைத்து தாக்குதல் நடத்தப்படும். மும்பையைத் தகா்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன’ என்று கூறப்பட்டுள்ளது. இதனை உடனடியாகக் தீவிர கவனத்தில் கொண்ட காவல் துறையினா், அச்சுறுத்தல் செய்தி வந்த எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தினா்.
பாகிஸ்தானில் உள்ள கைப்பேசி எண்ணில் இருந்து அந்தச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலோரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் துறையினா் அதிகரித்துள்ளனா். இந்த நிலையில் இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதியை ரஷியா கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.