விவசாய நிலத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானப் படையின் ஹெலிகாப்டர்
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய நிலத்தில் திடீரென்று இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஹனுமன்கர் மாவட்டத்திற்கு அருகேவுள்ள கிராமத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்த விமானப் படைக்கு சொந்தமான ‘மி-35’ ரக ஹெலிகாப்டர் திடீரென அவசரமாக விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்டது. இதனைக் கண்ட கிராம மக்கள் சிறிது பதற்றம் அடைந்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், ஹெலிகாப்டரில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கோரிக்கை பட்டியல்: அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் கடிதம்
மேலும், ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கான விரிவான காரணம் குறித்து விசாரணைக்கு பின் விமானப் படை தரப்பில் அறிக்கை வெளியிடப்படும்.