லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை

பிகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை


பாட்னா: பிகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

பிகாரில் ரயில்வே வேலைவாய்ப்பு முறைகேடு வழக்கு, நில மோசடி தொடர்பாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு நெருக்கமான ஆர்ஜேடி நிர்வாகிகள் மூவர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பாட்னாவில் உள்ள ஆர்ஜேடி முன்னாள் எம்எல்சி சுபோத் ராய் வீடு மற்றும் நில மோசடி தொடர்பாக ஆர்ஜேடி தலைவர்கள் சுனில் சிங், அஷ்பாக் கரீம் மற்றும் ஃபயாஸ் அகமது ஆகியோரின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து எம்.பி மனோஜ் ஜா கூறுகையில், இது சிபிஐ சோதனை என்று சொல்லி பயனில்லை, இது பாஜகவின் சோதனை. அவர்கள் இப்போது பாஜாகவின் கீழ் வேலை செய்கிறார்கள், அவர்களின் அலுவலகங்கள் பாஜக என்ற எழுத்துடன் இயங்குகின்றன என குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com