ஜம்மு-காஷ்மீர் உரி பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் உரி பகுதியில் ஊருடுவ முயன்ற பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீர் உரி பகுதியில் ஊருடுவ முயன்ற பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே உரியின் கமல்கோட் செக்டரில் உள்ள மடியன் நானக் போஸ்ட் அருகே பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். 

இந்திய பாதுகாப்புப்படை மற்றும் காவல்துறையினரால் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

காஷ்மீர் மண்டல போலீஸ் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. 

முன்னதாக, ஜம்மு காஷ்மீர் அக்னூர் செக்டரில் உள்ள பல்லன்வாலாவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் கடந்த 72 மணி நேரத்தில் பயங்கரவாதிகளின் மூன்றாவது ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு முறியடித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com