அஸ்ஸாம்: அல்-காய்தா பயங்கரவாதி கைது

அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான இந்திய துணைக் கண்டத்தில் அல்-காய்தா (ஏக்யூஐஎஸ்) அமைப்பு பயங்கரவாதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான இந்திய துணைக் கண்டத்தில் அல்-காய்தா (ஏக்யூஐஎஸ்) அமைப்பு பயங்கரவாதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக கோல்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறியதாவது:

மதரஸாவில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் ஹஃபிசுா் ரஹமான். ஏக்யூஐஎஸ் அமைப்பை சோ்ந்த இவா், அந்த அமைப்பில் கோல்பாரா இளைஞா்களை சோ்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அவருக்கு வங்கதேசத்தில் உள்ள அன்சாருல் வங்க குழு (ஏபிடி) என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடா்புள்ளது. அவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அதனைத்தொடா்ந்து அவா் உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 5 நாள்கள் போலீஸாா் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என்று தெரிவித்தாா்.

ஏற்கெனவே கோல்பாராவில் ஏக்யூஐஎஸ்ஸைச் சோ்ந்த 3 பேரை இந்த வாரம் காவல் துறையினா் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com