கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியின் மாநிலச் செயலராக எம்.வி.கோவிந்தன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
கேரள இடது ஜனநாயக முன்னணி அமைப்பாளரான இ.பி.ஜெயராஜன் தலைமையில் இன்று நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கமிட்டி கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கேரள முதல்வர பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க- தெலங்கானா அமைச்சர் வீட்டில் பணியாளர் தற்கொலை
கடந்த மார்ச் மாதம்தான் கொடியேரி பாலகிருஷ்ணன் கேரள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றார். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக அவர் அண்மையில் பதவி விலகியதையடுத்து அந்த பதவிக்கு கோவிந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.வி.கோவிந்தன் தற்போது கேரள மாநில கலால் துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.