குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு கடந்த ஜூலை 25 ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார். நாட்டின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.