பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் கைது!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொண்டர்கள் மத்தியில் பேசும் ராஜா படேரியா.
தொண்டர்கள் மத்தியில் பேசும் ராஜா படேரியா.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை கொல்லத் தயாராக இருங்கள் என மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா, தொண்டர்கள் மத்தியில் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

படேரியாவின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மக்களைத் தூண்டும் விதமாக பேசியதாக படேரியா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச மாநில முன்னாள் அமைச்சரான ராஜா படேரியா தொண்டர்கள் மத்தியில் பேசிய விடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்நிலையில், மத்தியப் பிரதேச  அரசு ராஜா படேரியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com