விஜயவாடாவில் 2 அரசுப் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன

விஜயவாடாவில் டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசுப் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடாவில் 2 அரசுப் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன

விஜயவாடாவில் டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசுப் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள வித்யாதரபுரம் டிப்போவில் அரசுப் பேருந்துகள் இன்று காலை வழக்கம்போல் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது திடீரென 2 பேருந்துகளில்  தீப் பற்றியது. இந்த சம்பவத்தில் ஒரு பேருந்து முற்றிலும் எரிந்த நிலையில் மற்றொரு பேருந்து பகுதியளவில் எரிந்துள்ளது. 

இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) ஏற்பட்ட "கசிவு" பிரச்னை காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. டிப்போ மேலாளர் கூறுகையில், பேருந்துகள் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், டிப்போவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார். 

மேலும், ஆர்டிசி பேருந்துகளை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மீதும் அவர் குற்றம் சாட்டினார். விஜயவாடாவில் டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசுப் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com