ஹரியாணாவில் கடும் பனிமூட்டம் காரணமாக நெடுஞ்சாலையில் 22 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 12 பேர் காயமடைந்தனர்.
ஹரியாணா மாநிலம், யமுனா நகரில் இன்று அதிகாலை வழக்கம்போல் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி ஊர்ந்து சென்றன. இந்த நிலையில் அம்பாலா-சஹாரன்பூர் நெடுஞ்சாலையில் பஞ்சாபிலிருந்து சஹாரன்பூருக்குச் சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க- இந்தியாவிலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி: பிரதமர் மோடி
இதில் பல வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் விபத்தில் சிக்கிய வாகனங்களை உடனே அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து காயமடைந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.