ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடந்த இந்த என்கவுன்டரில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
காஷ்மீர் பகுதியில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் உள்ள முன்ஜ் மார்க் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இன்னும் என்கவுன்டர் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: 'கனெக்ட்' படத்தின் புதிய அப்டேட்: விக்னேஷ் சிவன் தகவல்
பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி ஒன்றும், இரண்டு கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.