நாட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் புதன்கிழமை தெரிவித்தார்.
சீனாவில் கரோனா நோய்த் தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு வி.கே.பால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விமானப் போக்குவரத்துக்கு தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும். எந்த மாற்றமும் இல்லை. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.
27-28 சதவிகிதம் மக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர். மூத்த குடிமக்கள் உள்பட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். அதற்கான வழிமுறைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.