தங்களைத் தாக்குபவர்களிடமிருந்து காத்துக்கொள்ளவும், தங்களின் கண்ணியத்தைக் காத்துக்கொள்ளவும் ஹிந்துக்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார்.
தங்கள் மதம் சார்ந்து பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் கடமை ஹிந்துக்களுக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இது தொடர்பாக பேசிய அவர், உங்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்துக்கொள்ளுங்கள். குறைந்தபட்சம், காய்கறிகளை வெட்டும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களையாவது வைத்துக்கொள்ளுங்கள். எதுபோன்ற இக்கட்டான சூழல் உருவாகும் என்று கூற முடியாது. தங்களைக் காத்துக்கொள்ளும் உரிமை அனைவருக்கும் உள்ளது. யாரேனும் நமது வீடுகளில் புகுந்து தாக்க முற்பட்டால், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
மேலும், லவ் ஜிகாத் குறித்து பேசிய பிரக்யா, ஜிகாத் செய்யும் பாரம்பரியம் அவர்களுடையது (முஸ்லீம்). காதலித்தாலும் ஜிகாத் செய்கின்றனர். நாமும் காதலிக்கிறோம். நாம் கடவுளை காதலிக்கிறோம். துறவிகள் கடவுளை காதல் கொள்கின்றனர்.