25 தேசிய மனநல சிகிச்சை மையங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
சமீப காலமாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்காக 25 தேசிய மனநல சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.