’கிரிப்டோகரன்சி குறித்த விவாதம் தேவை இல்லை’: நிர்மலா சீதாராமன்

கிரிப்டோகரன்சி மற்றும் கிரிப்டோ சொத்துகள் குறித்த விவாதம் தற்போது தேவை இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
’கிரிப்டோகரன்சி குறித்த விவாதம் தேவை இல்லை’: நிர்மலா சீதாராமன்

கிரிப்டோகரன்சி மற்றும் கிரிப்டோ சொத்துகள் குறித்த விவாதம் தற்போது தேவை இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சியை வணிகத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என்றும் ஒவ்வொரு கிரிப்டோ பரிவர்த்தனைக்கும் 1% வரிப் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

அது குறித்த நிர்மலா சீதாரானிடம் கேள்வி எழுப்பியபோது ’மத்திய ரிசர்வ் வங்கி ஒரு டிஜிட்டல் நாணயத்தை வெளியிடும், கிரிப்டோ மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் என்ன என்பது பற்றி இப்போது எந்த விவாதமும் தேவை இல்லை. சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. டிஜிட்டல் சொத்துகள் குறித்த விவரம் ஆலோசனைக்கு பிறகு தெரியவரும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com