அரசுப் பணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று 2022 - 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
“நாட்டில் வேலையின்மை பரவலாக அதிகரித்து வருகிறது. பெரும் தொழிற்சாலைகள் மூடி வருவதால் இளைஞர்கள் துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். முதலீடுகள் மற்றும் அரசுப் பணிகளும் குறைந்து வருகின்றது.
2014ஆம் ஆண்டில் பாஜக வாக்குறுதியில் ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தனர். அப்படியெனில், தற்போது 15 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால், எவ்வளவு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.”