மேற்குவங்கத்தில் 8 முதல் 12 வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் குறைந்துள்ளதையடுத்து படிப்படியாக பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மேற்குவங்கத்தில் 8 முதல் 12 வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த வாரம் முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
அதன்படி இன்று மேற்குவங்கத்தில் 8 முதல் 12 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஆரம்பப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் கூறியது குறிப்பிடத்தக்கது.