தில்லியில் ரூ.12 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

தில்லியில் ரூ.12 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தியதாக 3 பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
தில்லியில் ரூ.12 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

தில்லியில் ரூ.12 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தியதாக 3 பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக காவல்துறை துணை ஆணையர் சங்கர் சௌத்ரி கூறுகையில், 

சமீபத்தில் தொடங்கிய "வர்ச்சஸ்வ்" என்ற நடவடிக்கையின் கீழ் சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தில்லி மற்றும் ஹரியானா காவல்துறையின் கூட்டு நடவடிக்கை என்று அவர் கூறினார். 

சமீபத்தில் சோனிபட் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஹரியானா காவல்துறையின் குழு, தேசிய தலைநகர் துவாரகாவிற்கு வந்தது. 

இதையடுத்து துவாரகாவில் உள்ள பகவதி கார்டன் விரிவாக்கப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது தப்பியோடு முயன்ற மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

சிறுமிகள் ஷிவானி(18), ப்ரீத்தி(18), மற்றும் கிரண் (27) என அடையாளம் காணப்பட்டனர்.

மீட்கப்பட்ட பொருளின் மொத்த எடை 1,263 கிராம் என்றும், அது ஹெராயின் என்றும் தெரியவந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகின்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com