அலிகார்; ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா, வரும் 2023ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கும் வரை மாலையோ, தலைப்பாகையோ அணியப்போவதில்லை என்று சபதம் எடுத்துள்ளார்.
அலிகார் அருகே நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய சதீஷ் பூனியா, வரும் 2023ஆம் ஆண்டு ராஜஸ்தான் பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து, பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கும் வரை, மாலையோ, தலைப்பாகையோ அணியப்போவதில்லை என்று சபதம் எடுத்துள்ளேன். அது மட்டுமல்ல, அதுவரை இரவு உணவு கூட எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.
ராஜஸ்தான் பேரவைக்கு வரும் 2023ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில், 199 தொகுதிகளில், 99 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி, பாஜகவிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.