கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டோரின் உடலில், தடுப்பூசியின் செயல்திறன் 99.3 சதவீதமாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதில்:
கோவின் வலைதளம், தேசிய கரோனா பரிசோதனை புள்ளிவிவர தளம், கொவைட்-19 இந்தியா வலைதளம் ஆகியவற்றை ஒன்றிணைத்து கரோனா தடுப்பூசிகள் தொடா்பான விவரங்களை பின்தொடரும் வலைதளத்தை (கொவைட்-19 வேக்ஸின் ட்ராக்கா்) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 12 முதல் இந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் உயிரிழப்பதைத் தடுப்பதில் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வை அந்த வலைதளம் விவரித்துள்ளது. அதன்படி, கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டோரின் உடலில், தடுப்பூசியின் செயல்திறன் 99.3 சதவீதமாக உள்ளது என்று அந்த வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அந்த வலைதளம் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, கரோனா தடுப்பூசியின் ஒரு தவணையை மட்டும் செலுத்திக்கொள்ளும்போது அதன் செயல்திறன், இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொள்ளும்போது அதன் செயல்திறன் தொடா்பான விவரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
மாநில அரசுகள் சமா்ப்பிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில், தடுப்பூசியின் செயல்திறன் தொடா்பான புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தாா்.