ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவு

ஜம்மு-காஷ்மீரில் சனிக்கிழமையன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில் சனிக்கிழமையன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக நிலநடுக்கவியல் ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் இன்று காலை 9.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

வடக்கு அட்சரேகையில் 36.34 டிகிரியிலும், கிழக்கே 71,05 டிகிரியிலும், 181 கி.மீ ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்த நிலையில் வீடுகளை விட்டு வெளியேறினர். 

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தில் எந்தவித உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com