உ.பி. அலிகர் பகுதியில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அலிகர் பகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். 
உ.பி. அலிகர் பகுதியில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அலிகர் பகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். 

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.  இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

பாஜக சார்பில், கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, அமித் ஷா ஆகியோர் அங்கு தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதுபோல காங்கிரஸ் தலைவர்களும் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அலிகார் பகுதியில் 'கைர்'(Khair) சட்டப்பேரவைத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com