புது தில்லி: அருணாச்சலப் பிரதேசம் காமெங் செக்டார் பகுதியில் இன்று நேரிட்ட பயங்கர பனிப்புயலில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 7 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. மீட்புப் பணியில் ஈடுபட சிறப்பு நிபுணத்துவம் பெற்ற தனிப்படையினர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
சம்பவம் நடந்த பகுதியில், கடந்த ஒரு சில நாள்களாக மோசமான வானிலை நிலவி வருவதாகவும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் நேற்றிலிருந்து அந்த இடத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.