நடிகை விவகாரத்தில் விசாரணை அதிகாரியை மிரட்டிய புகார் வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது.
கேரளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக பிரபல நடிகை ஒருவா் புகாா் தெரிவித்தாா். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த கேரள காவல் துறையினா், மலையாள நடிகா் திலீப் உள்பட 7 பேரைக் கைது செய்தனா்.
இதையும் படிக்க- நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: இன்று இறுதி வேட்பாளா் பட்டியல்
பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட திலீப், பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளை மிரட்டியதாக திலீப் உள்ளிட்ட 6 போ் மீது குற்றத் தடுப்புப் பிரிவினா் வழக்கு பதிவு செய்தனா்.
இந்த நிலையில் இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி திலீப் உள்ளிட்டோா் கேரள உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை இன்று விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் நடிகர் திலீப், சகோதரர் சிவக்குமார், உறவினர் சுராஜ் உள்பட 6 பேருக்கு முன்ஜாமீன் வழங்கியது.