அருணாச்சலப் பிரதேசம்: பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் பலி

அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் பலியானதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் பலியானதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கமெங் பகுதியில் நேற்று(பிப்.7) ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் எதிர்பாராத விதமாக பனிச்சரிவில் ராணுவத்தினர் 7 பேர் சிக்கினர். முதலில் மாயமானதாக தெரிவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமடைந்த நிலையில் தற்போது அனைவரும் பலியானதாகவும் அவர்களின் உடல்கள்  மீட்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com