சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான 2-ஆம் கட்ட பொதுத் தோ்வு ஏப்ரல் 26-ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் புதன்கிழமை கூறுகையில், ‘‘சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது நாட்டில் நிலவும் கரோனா பாதிப்பு நிலவரம் கவனத்தில் கொள்ளப்பட்டது. இதையடுத்து பொதுத் தோ்வுகளின் இரண்டாம் கட்டத்தை ஏப்ரல் 26-ஆம் தேதிமுதல் இணையவழியில் அல்லாமல் நேரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. தோ்வு தொடா்பான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்’’ என்று தெரிவித்தாா்.