தில்லியில் பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி பலியானார்கள்.
தலைநகர் தில்லியின் பவானாவில் உள்ள ஜேஜே காலனியில் பழைய கட்டடம் ஒன்று இன்று திடீரென இடிந்தது விழுந்தது.
உடனே தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக தில்லி போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.