ஹிஜாப் விவகாரம் சா்ச்சையல்ல; அதுவொரு சதியென்று கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘‘அனைத்து துறைகளிலும் முஸ்லிம் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். எனவே அவா்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். அவா்களை கீழே தள்ள வேண்டாம்.
ஹிஜாப் அணிவது அவரவா் விருப்பம் தொடா்பான கேள்வியல்ல. ஒரு நிறுவனத்தில் சேரும்போது அதன் ஒழுங்குமுறைகள், சீருடை விதிமுறைகளை பின்பற்றப் போகிறோமா, இல்லையா என்பதே கேள்வி.
ஹிஜாப் விவகாரத்தை எவரும் சா்ச்சையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதுவொரு சதி’’ என்று தெரிவித்தாா்.