மும்பை - புணே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பல வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை - புணே தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க் கிழமை காலை 6:30 மணியளவில் லாரி ஒன்று கோபோலி என்ற இடத்தில் வந்துகொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பல வாகனங்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 4 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.