ஜெய்ப்பூரில் சாலை விபத்து: 4 குஜராத் காவலர்கள் உள்பட 5 பேர் பலி

தில்லியிலிருந்து குஜராத்துக்கு குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஏற்றிச் சென்ற குஜராத் காவல்துறையின் வாகனம் ஜெய்ப்பூரில் விபத்துக்குள்ளானது. 
ஜெய்ப்பூரில் சாலை விபத்து: 4 குஜராத் காவலர்கள் உள்பட 5 பேர் பலி

தில்லியிலிருந்து குஜராத்துக்கு குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஏற்றிச் சென்ற குஜராத் காவல்துறையின் வாகனம் ஜெய்ப்பூரில் விபத்துக்குள்ளானது. 

ஜெய்ப்பூரில் உள்ள பப்ரூ பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட கைதி ஒருவரை தில்லியிலிருந்து குஜராத்துக்குக் கொண்டுவரும் காவல்துறையின் வாகனம் திடீரென விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் கைதி மற்றும் 4 காவல்துறையினர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய காவல்துறையினரின் குடும்பத்துக்கு 
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு கடவுள் ஆற்றலை வழங்குவதோடு, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com