பஞ்சாப் பேரவைத் தேர்தல் பிரசாரம் நிறைவு

பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 
பஞ்சாப் பேரவைத் தேர்தல் பிரசாரம் நிறைவு

பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 

பஞ்சாபில் 117 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில், ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாரதிய ஜனதா கூட்டணி என பலமுனைப் போட்டிகள் நிலவுகிறது.

தேர்தலில் காங்கிஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்க களமிறங்கியுள்ளது.

மறுபுறம் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மியும் ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. காங்கிரஸுக்கு ஆதரவாக ராகுல், பிரியங்கா, ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால், பாஜக கூட்டணிக்கு ஆதவராக பிரமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

பஞ்சாபில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இறுதிநாளான இன்று கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com