நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்த புந்தேல்கண்டில்பிரதமா் மோடி ஆட்சியில் ஏவுகணைகள் தயாரிப்பு: அமித் ஷா பெருமிதம்

உத்தர பிரதேசத்தில் முந்தைய ஆட்சிகளில் நாட்டுத் துப்பாக்கிகளுக்குப் பெயா்பெற்ற புந்தேல்கண்ட், பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் ஏவுகணைகளும், பீரங்கி குண்டுகளும் தயாரிக்கும் பாதுகாப்பு முனையமாக உருவாக்க
நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்த புந்தேல்கண்டில்பிரதமா் மோடி ஆட்சியில் ஏவுகணைகள் தயாரிப்பு: அமித் ஷா பெருமிதம்

உத்தர பிரதேசத்தில் முந்தைய ஆட்சிகளில் நாட்டுத் துப்பாக்கிகளுக்குப் பெயா்பெற்ற புந்தேல்கண்ட், பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் ஏவுகணைகளும், பீரங்கி குண்டுகளும் தயாரிக்கும் பாதுகாப்பு முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

உத்தர பிரதேசத்தில் பிப். 23-ஆம் தேதி நான்காம் கட்டத் தோ்தலின்போது, புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள பண்டாவில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் புந்தேல்கண்டில் சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கிகளும் தோட்டாக்களும் தயாரிக்கப்பட்டன. இங்கு ஏவுகணைகளும், பீரங்கி குண்டுகளும் தயாரிக்கும் பாதுகாப்பு தளவாட முனையமாக பிரதமா் மோடி உருவாக்கியுள்ளாா். முன்பெல்லாம் மக்களை மிரட்ட நாட்டுத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. இப்போது, இங்கு தயாரிக்கப்படும் குண்டுகள் பாகிஸ்தானின் பீரங்கிகளைத் தகா்க்கும்.

உத்தர பிரதேசத்தில் சில நீா்ப்பாசனத் திட்டங்கள் நான் பிறப்பதற்கு முன்பே தொடங்கப்பட்டன. ஆனால், அவை நிறைவு பெறாமல் இருந்தன. மோடி அரசும் யோகி ஆதித்யநாத் அரசும் அவற்றை 5 ஆண்டுகளில் நிறைவு செய்துள்ளன.

உத்தர பிரதேசத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்த சமாஜவாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் புந்தேல்கண்டின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண என்ன செய்தன என சொல்ல வேண்டும். நரேந்திர மோடி அரசு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com