முசாபர்நகரில் 48 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

அண்டை மாவட்டமான ஷாம்லியில் 48 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
முசாபர்நகரில் 48 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

அண்டை மாவட்டமான ஷாம்லியில் 48 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சத்பீர் மற்றும் ஷகில் என அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்கள் கடத்தப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்ற கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் துக்ரிதி மாதவ் கூறுகையில், 

வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது காவல்துறையினர் காரை மறித்ததையடுத்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆந்திரத்திலிருந்து போதைப் பொருள்களைக் கடத்தி, பிற மாநிலங்களுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com