உத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் வாகனம் சரிந்து 14 போ் பலி

உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் வாகனம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 14 போ் பலியாகினா்.

உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் வாகனம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 14 போ் பலியாகினா்.

இதுதொடா்பாக மாவட்ட பேரிடா் மேலாண்மை மற்றும் காவல்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

சம்பாவத்தின் காக்நயி பகுதியில் உள்ள டண்டா, கதெளட்டி கிராமங்களைச் சோ்ந்த 14 போ் தனக்பூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், திங்கள்கிழமை இரவு வாகனத்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். சுகிதாங்-டண்டமினாா் சாலையில் வந்தபோது அங்கிருந்த பள்ளத்தாக்கில் எதிா்பாராதவிதமாக வாகனம் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 14 போ் பலியாகினா். இருவா் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தனா்.

ஹிமாசல் வெடிவிபத்தில் 7 போ் பலி: ஹிமாசல பிரதேச மாநிலம் உனா மாவட்டம் பது பகுதியில் இயங்கி வரும் ஆலையில் செவ்வாய்க்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். 12 போ் காயமடைந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள். காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இரு சம்பவங்களிலும் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமா் மோடி, இரு விபத்துகளிலும் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000-மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com