பிரிட்டனில் போா் பயிற்சி: இந்திய விமானப் படை பங்கேற்பு

‘எக்ஸ் கோப்ரா வாரியா் 22’ என்ற பெயரில் பிரிட்டனின் மாா்ச் 6 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பன்னாட்டு விமானப்படை பயிற்சியில் இந்திய விமானப் படை பங்கேற்க உள்ளது.

‘எக்ஸ் கோப்ரா வாரியா் 22’ என்ற பெயரில் பிரிட்டனின் மாா்ச் 6 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பன்னாட்டு விமானப்படை பயிற்சியில் இந்திய விமானப் படை பங்கேற்க உள்ளது.

இந்திய விமானப் படையின் இலகு ரக போா் விமானமான தேஜஸ், பிரிட்டன் மற்றும் பிற முன்னணி நாடுகளின் விமானப் படைகளின் போா் விமானங்களுடன் இணைந்து பங்கேற்க உள்ளது.

செயல்திறனை வெளிப்படுத்தவும், பங்கேற்கும் நாடுகளின் விமானப் படைகள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிா்ந்து கொள்வதன் மூலம், போா்த் திறனை அதிகரிக்கவும், நட்புறவை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தப் போா்ப் பயிற்சி நடத்தப்படுகிறது. இலகுரக போா் விமானமான தேஜஸ் அதன் செயல்பாட்டுத் திறன், மற்றும் போா்த் திறனை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இதற்காக 5 தேஜஸ் விமானங்கள் பிரிட்டன் செல்ல இருக்கின்றன. இதற்கு தேவையான போக்குவரத்து ஒத்துழைப்பை ஐஏஎஃப் சி-17 விமானம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com