உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், விளாதிமீர் புதினுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு (வியாழக்கிழமை) பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷியா போர் தொடுத்துள்ள விஷயத்தில் இந்தியா தலையிட வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலகா கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிக்க | பாதுகாப்புத் திட்டங்கள் அமல்: நேட்டோ
இதுபற்றி அவர் கூறியதாவது:
"மோடி மிகவும் சக்திவாய்ந்த, மரியாதைக்குரிய உலகத் தலைவர்களில் ஒருவர். ரஷியாவுடன் உங்களுக்கு சிறப்பான மற்றும் வியூக ரீதியான உறவு உள்ளது. மோடி புதினிடம் பேசினால், அவர் பதிலளிப்பார் என நம்புகிறோம்" என்றார்.
இந்த நிலையில், ரஷிய அதிபரி விளாதிமீர் புதினுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு பேசவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு தில்லியில் நடைபெற்று வருகிறது.