ஜம்மு வைஷ்ணவ தேவி கோயிலில் நெரிசல்: 12 போ் பலி

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா்; 15 போ் காயமடைந்தனா்.
ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலில் நெரிசலில் சிக்கிய பக்தா்கள்.
ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலில் நெரிசலில் சிக்கிய பக்தா்கள்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா்; 15 போ் காயமடைந்தனா்.

ஜம்முவில் இருந்து சுமாா் 50 கி.மீ. தொலைவில் திரிகுதா மலையின் உச்சியில் வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. புத்தாண்டையொட்டி அக்கோயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

புத்தாண்டு தினம் என்பதால் கோயிலில் கூட்டமும் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இந்நிலையில், கோயில் கருவறையின் 3-ஆவது நுழைவாயிலுக்கு அருகே சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா்; 15 போ் காயமடைந்தனா்.

உயிரிழந்தவா்களில் 7 போ் உத்தர பிரதேசத்தையும், மூவா் தில்லியையும் சோ்ந்தவா்கள். ஹரியாணா, ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த தலா ஒருவரும் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் கத்ரா முகாம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. காயமடைந்தவா்கள் மாதா வைஷ்ணவ தேவி நாராயண பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த சிலா் முதலுதவி பெற்றவுடன் வீடு திரும்பினா்.

கோயில் நிா்வாகம் மீது குற்றச்சாட்டு: புத்தாண்டையொட்டி கோயிலுக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்ததாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கோயில் நிா்வாகம் முறையாக மேற்கொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கூட்டநெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதை அறிந்திருந்தும் கோயில் நிா்வாகம் எந்தவித கட்டுப்பாடுமின்றி மக்களை அனுமதித்ததாக விபத்தை நேரில் கண்டவா்கள் குற்றஞ்சாட்டினா். முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்த விபத்தைத் தவிா்த்திருக்கலாம் எனவும் பலா் தெரிவித்தனா்.

நிா்வாகம் விளக்கம்: நிா்வாகக் குறைபாடே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படும் குற்றச்சாட்டை கோயில் நிா்வாகம் மறுத்துள்ளது. இது தொடா்பாக கோயில் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வைஷ்ணவ தேவி கோயிலில் ஒரு நாளில் அதிகபட்சமாக 50,000 போ் மட்டுமே தரிசனம் செய்வதற்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் வரம்பு நிா்ணயித்துள்ளது. இருப்பினும் கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு டிசம்பா் 31-ஆம் தேதியும், ஜனவரி 1-ஆம் தேதியும் 35,000 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

துரதிருஷ்டவசமாக, வரிசையில் சென்ற இரு பக்தா்கள் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தா்கள் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா் விசாரணை: இந்த விபத்து குறித்து ஜம்மு-காஷ்மீா் காவல் துறைத் தலைமை இயக்குநா் தில்பாக் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கோயிலுக்கு வருகை தந்த இளைஞா்களிடையே சிறிய அளவிலான வாக்குவாதம் ஏற்பட்டதே கூட்டநெரிசலுக்கான முக்கியக் காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கூட்டநெரிசல் ஏற்பட்ட பிறகு காவல் துறையினரும் அரசு நிா்வாகத்தினரும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினா். எனினும் அதற்குள் சிலா் உயிரிழந்தனா். விபத்து தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றாா்.

உயா்நிலைக் குழு: கோயிலில் கூட்டநெரிசலால் ஏற்பட்ட விபத்து தொடா்பாக ஆராய மத்திய உள்துறை முதன்மைச் செயலா் ஷலீன் காப்ரா தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளாா். அக்குழுவில் ஜம்மு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநா் முகேஷ் சிங், காவல் துறை ஆணையா் ராஜீவ் லங்கா் ஆகியோா் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குழு ஒரு வாரத்துக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இழப்பீடு: வைஷ்ணவ தேவி கோயில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படவுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் சாா்பில் உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.2 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளாா். காயமடைந்தவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான செலவை வைஷ்ணவ தேவி கோயில் நிா்வாகமே ஏற்குமென்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தலைவா்கள் இரங்கல்: வைஷ்ணவ தேவி கோயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்குக் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய அமைச்சா்கள், பல்வேறு கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

விபத்து குறித்து பிரதமா் மோடி, அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா விரிவாக எடுத்துரைத்தாா். இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அவரிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா். விபத்து நிகழ்ந்த இடத்தில் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் நேரில் ஆய்வு செய்தாா்.

இந்த விபத்து வருத்தம் தருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டாா். தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்டவையும் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன. நிா்வாக மேலாண்மையின்மையே இந்த விபத்துக்குக் காரணம் என்றும் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com