திருவனந்தபுரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

திருவனந்தபுரத்தில் குப்பைகள் சேகரித்துவைக்கும் கிடங்கில் இன்று பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 
திருவனந்தபுரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

திருவனந்தபுரத்தில் குப்பைகள் சேகரித்துவைக்கும் கிடங்கில் இன்று பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

கேரளத்தின் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனாவில் குப்பைக் கிடங்கில் இன்று பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியுள்ளது. சில மீட்டர் தொலைவில் தனியார் மருத்துவமனை ஒன்றும் உள்ளது. 

முதலில் தீயினை அணைக்க இரண்டு தீயணைப்புப் படைகள் வந்த நிலையில், பின்னர் சிரமம் ஏற்பட்டதால் கூடுதலாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். 

அதிக அளவில் புகை மூட்டமாக இருந்ததாலும் கிடங்கில் கண்ணாடி உள்ளிட்ட பொருள்கள் சிதறியிருந்ததாலும் தீயினை அணைக்க சற்று சிரமம் ஏற்பட்டதாக வீரர்கள் தெரிவித்தனர். தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் ஏதுமில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com