புரி: டிசம்பர் 31ஆம் தேதி முதல் கடந்த மூன்று நாள்களாக மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற ஸ்ரீஜெகந்நாதர் கோயில் இன்று காலை பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்பட்டது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, புத்தாண்டு நாளில், அதிக பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீஜெகந்நாதர் கோயில் டிசம்பர் 31ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் மூடப்பட்டிருந்தது.
ஆனால், கோயிலில் அன்றாடம் நடைபெற வேண்டிய பூஜைகள், பூசாரிகள் மற்றும் சேவார்த்திகள் மூலமாக தொடர்ந்து மூன்று நாள்களும் நடைபெற்று வந்தது. அதுபோல, கோயில் முழுவதும் சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்றது.
இதையும் படிக்க.. நல்ல செய்தி: குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர வாய்ப்பு?
கோயிலில் பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் வெகுச் சிறப்பாக செய்யப்பட்டு, இன்று மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.