பிகார்: லாரி மோதியதில் 3 காவலர்கள் பலி
பிகார்: லாரி மோதியதில் 3 காவலர்கள் பலி

பிகார்: லாரி மோதியதில் 3 காவலர்கள் பலி

பிகார் மாநிலம் பாட்னாவில் அதிவேகமாக வந்த கனரக வாகனம் காவல்துறை வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 3 காவலர்கள் பலியாகினர்.

பிகார் மாநிலம் பாட்னாவில் அதிவேகமாக வந்த கனரக வாகனம் காவல்துறை வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 3 காவலர்கள் பலியாகினர்.

இன்று காலை பாட்னாவில் ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் சென்ற வாகனத்தின் மீது கனரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 காவலர்கள் பலியானதோடு 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக , காயமானவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com