இந்தியா
பிகார்: லாரி மோதியதில் 3 காவலர்கள் பலி
பிகார் மாநிலம் பாட்னாவில் அதிவேகமாக வந்த கனரக வாகனம் காவல்துறை வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 3 காவலர்கள் பலியாகினர்.
பிகார் மாநிலம் பாட்னாவில் அதிவேகமாக வந்த கனரக வாகனம் காவல்துறை வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 3 காவலர்கள் பலியாகினர்.
இன்று காலை பாட்னாவில் ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் சென்ற வாகனத்தின் மீது கனரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 காவலர்கள் பலியானதோடு 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக , காயமானவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.