கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாங்காங் ஏரியில் சீனா புதிய பாலம் அமைத்துவருவது குறித்து பிரதமர் மோடி மெளனம் காப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பாங்காங் ஏரி பகுதியில் இந்திய-சீன படை வீரா்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதில் இருதரப்பினருக்கு உயிா்ச்சேதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
இதையும் படிக்க | மும்பையில் பொதுமுடக்கமா? மாநகர மேயர் விளக்கம்
இந்நிலையில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாங்காங் ஏரியின் கரையோரத்தில் சீனா புதிய பாலம் அமைத்து வருவது செயற்கைக் கோள் புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைப் பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய பாலம் இருதரப்பு உறவில் மேலும் சிக்கலை உண்டுபண்ணியுள்ளது.
இதையும் படிக்க | தமிழ் பயிற்றுமொழி: பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் விலக்கு
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் த்லைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, "பிரதமர் மோடி காதுகள் அடைத்தவர் போல மெளனம் காக்கிறார். நமது நிலம், நமது மக்கள், நமது எல்லைகள் காக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் சீனாவும் எல்லைப் பகுதியில் ராணுவப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.