காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் நான்கு முறை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படையினரால் 3 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டம் சந்த்கம் கிராமத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக வந்த தகவலின்பேரில், சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவம் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்குப் பதில் தாக்குதல் நடத்தியதில் 3 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் மூன்று நாட்களில் நடந்த 4-வது துப்பாக்கிச்சூடு இதுவாகும்.