ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானைச் சோ்ந்தவா் உள்பட 3 ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தினா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
புல்வாமா மாவட்டம் சந்த்காம் கிராமப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிறிது நேரம் நீடித்த மோதலுக்குப் பிறகு 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்கள் மூவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பதும், இதில் ஒருவா் பாகிஸ்தானைச் சோ்ந்தவா் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவா்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள், துப்பாக்கித் தோட்டாக்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பாதுகாப்புப் படையினரின் முயற்சிக்கு இது மிகப்பெரிய வெற்றியாகும் என்றனா்.
கடந்த சில நாள்களாக காஷ்மீரில் ராணுவத்தினா், காவல் துறையினா் இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக சமீபகாலங்களில் இல்லாத வகையில் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதனால், அங்கு நாள்தோறும் ஒருசில பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவது தொடா் நிகழ்வாகியுள்ளது. இதில் பாகிஸ்தானை தாய்நாடாகக் கொண்ட பயங்கரவாதிகளும் அடங்குவா்.