மும்பை தொழிற்சாலையில் விஷவாயுக் கசிவு: ஒருவர் பலி, இருவர் மருத்துவமனையில் அனுமதி

மும்பையில் தொழிற்சாலை ஒன்றில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பையில் தொழிற்சாலை ஒன்றில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் காட்கோபர் மேற்குப் பகுதியில் குர்லா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று காலை 8.15 மணியளவில் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. 

இதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும் மேலும் இருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றான. 

பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com