ஒடிசாவில் புதிதாக 7,071 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில் இன்று ஒரு நாள் பாதிப்பு அதிகரித்துள்ளது. முந்தை நாளைவிட 46 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுவரை மாநிலத்தில் மொத்த பாதிப்பு 10.83 லட்சமாக உயர்ந்துள்ளது. , இதில் 707 குழந்தைகள் ஆவார்.
கடந்த 24 மணி நேரத்தில் போலங்கிர் மாவட்டத்தில் மேலும் ஒரு இறப்புடன், ஒடிசாவில் இறப்பு எண்ணிக்கை 8,469 ஆக உயர்ந்துள்ளது.