காபூலில் மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 2 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் பயங்கரவாதிகள் வீட்டிலிருந்தே இந்த பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டதாக இஸ்லாமிய எமிரேட் அதிகாரிகள் மற்றும் படை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதிகள் மறைவான இடத்திலிருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ராக்கெட் மற்றும் கையெறி குண்டுகள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக இஸ்லாமிய எமிரேட் படைகளின் உறுப்பினர் ஜாஹிட் கூறினார்.
இந்த சண்டை பல மணி நேரம் நீடித்ததாகவும், இதனால், அங்குள்ள உள்ளூர் மக்கள் கனரக மற்றும் இலகுரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் விவரம் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் அடையாளத்தை இஸ்லாமிய எமிரேட் பொதுமக்களுக்கு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.